திருக்குறள்

1188.

பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத் துறந்தார் அவரென்பார் இல்.

திருக்குறள் 1188

பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத் துறந்தார் அவரென்பார் இல்.

பொருள்:

இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே.

மு.வரததாசனார் உரை:

இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!.

சாலமன் பாப்பையா உரை:

இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.